நவம்பர் 1, 2020. குத்தாலம் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகமாக உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் குத்தாலம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், ஓட்டல்களில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பல கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Your phone number will not be published. Required fields are marked *