அக்டோபர் 13, 2020. மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். காரைக்கால் அருகே ஓடுதுறை பகுதியில் வந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது சாலையையொட்டி உள்ள வீட்டின் சுவரில் அவர் மோதினார். அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து திருபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Your phone number will not be published. Required fields are marked *